×

மீண்டும் உச்சத்தில் கொரோனா : அச்சத்தில் மக்கள்!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,263 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,31,39,981 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தினசரி கொரோனா 37,875 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 338 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,749
 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43,263 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,31,39,981 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தினசரி கொரோனா 37,875 ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 338 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,41,749 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 40,567 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து 3,23,04,618 குணமாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 3,91,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 86,51,701 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 71,65,97,428 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.