×

ஒரேநாளில் 546 பேர் உயிரிழப்பு…தினசரி அதிகரிக்கும் கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 3,13,32,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39,097பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,159 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 546 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,20,016 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா
 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை மொத்தம் 3,13,32,159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 39,097பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,159 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 546 பேர் பலியான நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,20,016 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 35,087 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3,05,03,166 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,08,977 ஆக உள்ளது. அத்துடன் கொரோனா பரவலில் இருந்து மக்கள் தங்களை காத்து கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் இதுவரை 42,78,82,261 தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.