×

ஒரே நாளில் 34,973 பேருக்கு கொரோனா : 260 பேர் பலி!!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 31,74,954 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா 37,875, நேற்று 43,263 ஆக தொற்று பரவல் இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 260 பேர் பலியாகியுள்ளனர். நேற்று
 

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது

.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 31,74,954 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா 37,875, நேற்று 43,263 ஆக தொற்று பரவல் இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 260 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 338 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,009 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 37,681 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து 3,23,42,299 குணமாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 3,90,646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை72,37,84,586 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.