×

ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் : மத்திய அரசின் அதிரடி உத்தரவு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,570 ஆக குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,33,81,728 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 37,950 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை 3,25,98,424 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 77.24 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 320 பேர் பலியாகியுள்ளனர்.
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 30,570 ஆக குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,33,81,728 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 37,950 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை 3,25,98,424 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 77.24 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 320 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 431 பேர் ஒரேநாளில் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44, 248 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை இந்த மாதம் தொடங்கி , அடுத்த மாதம் மத்தியில் உச்சத்தை அடையும் என்று சொல்லப்படும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது .