×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு கொரோனா!!
 

 

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 33,750 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம்  16,764 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று தொற்று எண்ணிக்கை  27,553 ஆக பதிவானது. இந்த சூழலில் தினசரி கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை கடந்துள்ளது.  இந்தியாவில் ஒரேநாளில் 9,249 பேர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.   நேற்று 284 பேர் பலியான நிலையில் இன்று உயிரிழப்பு எண்ணிக்கை வெகுவாக  குறைந்துள்ளது.  இருப்பினும் இந்தியாவில் இதுவரை 4,81,893 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் 10,846  பேர் குணமாகியுள்ள நிலையில் இதுவரை இந்தியாவில் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,42,95,407 ஆக உள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு  1,45,582 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அத்துடன் ஒட்டுமொத்தமாக இந்தியாவில்  1,45,68,89,306 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  அத்துடன் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 1,700 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று 1,525 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 1,700 ஆக உயர்ந்துள்ளது.