×

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 30,256 ஆகவும், நேற்று 26,115 ஆகவும் இருந்த நிலையில் இன்று மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,3,35,31,498 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 383 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 309 பேர் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 30,256 ஆகவும், நேற்று 26,115 ஆகவும் இருந்த நிலையில் இன்று மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை,3,35,31,498 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 383 பேர் பலியாகியுள்ளனர். நேற்று 309 பேர் இறந்த நிலையில் இன்று இறப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் மூலம் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,45,768 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 34,167 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து இதுவரை 3,27,83,741 பேர் குணமாகியுள்ளனர். 3,01,989 பேர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 82,65,15,754 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.