×

உயரும் கொரோனா பலி எண்ணிக்கை…3ஆம் அலையின் எதிரொலியா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 27,254 ஆக நிலையில் இன்று மேலும் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,32,89,579 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 339 பேர் பலியாகிய நிலையில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,213 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா பலி எண்ணிக்கை 219 ஆக இருந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொற்று
 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 27,254 ஆக நிலையில் இன்று மேலும் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,32,89,579 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 339 பேர் பலியாகிய நிலையில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,213 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா பலி எண்ணிக்கை 219  ஆக இருந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொற்று பரவல் குறைந்து வரும் போதிலும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவது அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 37,127 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து 3,24,84,159 குணமாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 3,62,207 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 78,66,950 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் இதுவரை 75,22,38,324 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.