மனைவி திருமணத்திற்கு புறம்பான உறவு! 19 பக்க கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்
மனைவி திருமணத்திற்கு புறம்பான உறவு கணவர் 19 பக்க தற்கொலைக் கடிதத்தை எழுதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் மார்க்காபுரத்தைச் சேர்ந்த சீதாராமுக்கும், நந்தியாலைச் சேர்ந்த ரேணுகாவுக்கும் 2018-ல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சீதாராம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து கொண்டு பச்சுபள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்தச் சூழலில், அவரது மனைவி திருமணத்திற்குப் புறம்பான உறவுடன் இருக்கும் தொடர்பான வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானதாலும், அவர் கடந்த பிப்ரவரியில் ஐதராபாத் ஹுசைன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சீதாராமின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சாப்ட்வேர் இன்ஜினியர் சீதாராம் எழுதிய 19 பக்க தற்கொலைக் கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மேலும் ரேணுகா ஒன்றரை ஆண்டுகளில் அவர் மூன்று பேருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததாகக் கூறியுள்ளார். அவர்களில் ஒருவருடன் தனிமையில் இருந்தபோது அந்த வீடியோக்களை அவர் பதிவு செய்ததாகவும் ஒரு பெண் அந்தரங்க வீடியோக்களைப் பதிவு செய்வது என்ன? ரமணா என்ற நபர் அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவற்றைப் பார்த்த பிறகு நான் எப்படிச் உயிருடன் இருப்பது. அவற்றைப் பார்த்த பிறகுதான் என் மனைவி உண்மையானவள் இல்லை என்று எனக்குத் தெரிந்தது. அவள் எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க நான் முயன்றேன். ஆனால் அவள் எனக்குத் துரோகம் செய்துவிட்டாள் என்று சீதாராம் தனது தற்கொலைக் கடிதத்தில் புலம்பியுள்ளார். நான் வெளியூரில் இருந்தபோது ரமணா பலமுறை வீட்டிற்கு வந்து ரேணுகாவுடன் நேரத்தைச் செலவிட்டுள்ளார். ரேணுகா உண்மையில் என்ன விரும்பினாளா என்று சீதாராம் அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இவை அனைத்திற்கும் பிறகு நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும் என்று பிப்ரவரியில் ஹுசைன் சாகர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தற்போது தற்கொலை வழக்கில் ரேணுகாவுடன், அவரது காதலர்களான ரமண ரெட்டி மற்றும் ஸ்ரவன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.