×

மனைவிக்கு வந்த மிஸ்டு கால் -கடுப்பான கணவன் -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.

ஒரு பெண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்த வாலிபரையும் ,ஒரு பெண்ணையும் ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் ஊடகத்தில் வைரலாகியுள்ளதுகுஜராத்தில் வதேராவில் பஞ்சமஹால் மாவட்டத்தில் கோகம்பா தாலுகாவின் கிலோடி கிராமத்தில் சர்ஜன் சடோல் என்ற வாலிபர் வசித்து வந்தார் .அந்த வாலிபருக்கு ஒரு வினோத பழக்கம் உள்ளது .அவர் பல பெண்களின் போன் நம்பர்களை எடுத்து அவர்களுக்கு அடிக்கடி மிஸ்ட் கால் கொடுப்பார் .இதனால் பல குடும்பங்களில் பிரச்சினை வந்துள்ளது .அதன்படி கடந்த சனிக்கிழமையன்று
 


ஒரு பெண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்த வாலிபரையும் ,ஒரு பெண்ணையும் ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் ஊடகத்தில் வைரலாகியுள்ளது
குஜராத்தில் வதேராவில் பஞ்சமஹால் மாவட்டத்தில் கோகம்பா தாலுகாவின் கிலோடி கிராமத்தில்


சர்ஜன் சடோல் என்ற வாலிபர் வசித்து வந்தார் .அந்த வாலிபருக்கு ஒரு வினோத பழக்கம் உள்ளது .அவர் பல பெண்களின் போன் நம்பர்களை எடுத்து அவர்களுக்கு அடிக்கடி மிஸ்ட் கால் கொடுப்பார் .இதனால் பல குடும்பங்களில் பிரச்சினை வந்துள்ளது .
அதன்படி கடந்த சனிக்கிழமையன்று அந்த பகுதியில் வசிக்கும் கல்யாணமான ஒரு பெண்ணுக்கு ‘கால் மீ’ என்று ஒரே ஒரு மெஸேஜ் அனுப்பியுள்ளார் .அந்த மெஸேஜை அந்த பெண்ணின் கணவர் பார்த்து விட்டார் .அதனால் அவர் தன்னுடைய மனைவியை சந்தேகப்பட்டு உடனே ஊரை கூட்டினார் .உடனே அந்த ஊரிலுள்ள அவரின் நண்பர்கள் பலர் சேர்ந்து அந்த மனைவியையும், மெஸேஜ் அனுப்பிய வாலிபரையும் அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்தனர் .இந்த தாக்குதல் நடந்த போது அந்த ஊர் பெரியவர் வந்து அவர்களை சமாதானப்படுத்தி ,அந்த இருவரையும் அவர்களிடமிருந்து காப்பாற்றினார் .பின்னர் அந்த சம்பவத்தை வீடியோ எடுத்த ஓரு வாலிபர் அதை ஊடகத்தில் வெளியிட்டார் .அதை பார்த்த போலீசார் அந்த தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்தார்கள் .