×

விவாகரத்து கேட்ட மனைவி -குழந்தையை கேட்ட கணவன் -அடுத்து நடந்த விபரீதம்

மனைவி விவாகரத்து கேட்டு குழந்தையை பிரித்ததால் மனமுடைந்த ஒரு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார் கர்நாடக மாநிலம் மேற்கு பெங்களூரு ஜக்ஜீவன்ராம் நகர் அருகேயுள்ள ராயபுரம் பகுதியில் வசிக்கும் 30 வயதான சல்மான் கான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரோஹினாஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.அவருக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது .சல்மான் அங்குள்ள சிவாஜி நகரில் தந்தையோடு சேர்ந்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார் .இந்நிலையில் அந்த இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது
 


மனைவி விவாகரத்து கேட்டு குழந்தையை பிரித்ததால் மனமுடைந்த ஒரு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டார்


கர்நாடக மாநிலம் மேற்கு பெங்களூரு ஜக்ஜீவன்ராம் நகர் அருகேயுள்ள ராயபுரம் பகுதியில் வசிக்கும் 30 வயதான சல்மான் கான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரோஹினாஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.அவருக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது .சல்மான் அங்குள்ள சிவாஜி நகரில் தந்தையோடு சேர்ந்து சொந்தமாக தொழில் செய்து வருகிறார் .இந்நிலையில் அந்த இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது .அதனால் அந்த மனைவி அவரின் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டார் .அதற்கு அந்த கணவன் தர மறுத்துள்ளார் .மேலும் அந்த குழந்தையை தன்னோடு விட்டு விட்டு செல்லும்படி சொன்னார் .இதனால் அந்தப்பெண் அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு சங்கமான NGOவை அணுகினார் .
அந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஷபீர் இருவரையும் விசாரித்து விட்டு ,அந்த பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, அவருக்கு 20 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டுமென்று கூறினார் .மேலும் அவர்களின் குழந்தையும் தாயோடுதான் இருக்கும் என்றார் .அப்படி கொடுக்க தவறினால் பல பெண்களை விட்டு மிரட்டுவோம் என்றார் .இதனால் பயந்துபோன சல்மான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் .இதன் காரணமாக அவரின் தற்கொலைக்கு அந்த மனைவி ரோஹினாஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஷபீர் அகியோர்தான் காரணமென்று அவரின் தந்தை போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .