திடீர் சூறைக்காற்று… விமானம் மீது மோதிய ஏணியால் மும்பை விமானநிலையத்தில் பரபரப்பு!
மும்பையில் இன்று காலை திடீரென்று வீசிய சூறாவளிக் காற்று காரணமாக மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது படி ஏணி மோதியதால் விமானம் சேதம் அடைந்தது.
மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 7.30 மணி அளவில் விமான நிலையத்தில் திடீரென்று சூறைக்காற்று வீசியது. அப்போது, பயணிகள் ஏற, இறங்க உதவும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் ஏணி ஒன்று வேகமாக நகர்ந்து இண்டிகோ விமானத்தின் மீது மோதியது. இதில், இண்டிகோ விமானத்தின் என்ஜின் மற்றும் இறகு பகுதி சேதம் அடைந்தது.