குஜராத்: பா.ஜ.க மந்திரியின் மகனைத் தடுத்து நிறுத்திய பெண் காவலர் ராஜினாமா! – எழுதி வாங்கியதாகப் புகார்
குஜராத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நள்ளிரவில் காரில் வலம் வந்த அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்திய காவலர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதற்கு அமைச்சரின் மகன் பிரகாஷ், உன்னை 365 நாளும் இதே இடத்தில் நிற்க வைக்கிறேன் என்று சவால் விட்டுள்ளார். அதற்கு சுனிதா, நான் உங்கள் வீட்டு பணிப்பெண்ணோ, அடிமையோ இல்லை என்று பதிலடி அளித்தார். இவை அனைத்தையும் அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதி இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே சுனிதா உள்ளிட்டவர்களை உடனடியாக காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகவே அமைச்சரின் மகனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்திய சுனிதா யாதவ் அவசர அவசரமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக பலரும் கருத்துக்கள் கூறவே தற்போது அவர் ராஜினாமா செய்துவிட்டதாக குஜராத் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா யாதவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக குஜராத் போலீசாருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவருக்கு மீண்டும் அதே காவல் நிலையத்தில் பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து நண்பரின் தந்தைக்கு நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்கு சென்றதாகவும், அவர்களை சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தியதால்தான் அமைச்சரின் மகன் தலையிட்டார் என்றும் அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.