தங்கம் கடத்தல்: பினராயி விஜயன் செயலாளரிடம் ஒன்பது மணி நேர விசாரணை!
தங்கம் கடத்தல் தொடர்பாக பினராயி விஜயனின் முதன்மை செயலாளரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கேரளாவை அதிர வைக்கும் அளவுக்கு தங்கக் கடத்தல் விவகாரம் வெளியானது.
அதைத் தொடர்ந்து சிவசங்கரனை சுங்கத் துறையினர் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இவருக்கும் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்களுக்கும் உள்ள தொடர்பு, செய்த உதவிகள் பற்றி சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.