×

டிக் டோக்கில் அறிமுகமான பெண்ணுடன் திருமணம் !! ஊரடங்கில் சிக்கனமாக திருமணத்தை நடத்திய இளைஞன் !!

கேரள மாநிலம் திரிச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கை மீறி வரும் வாகனங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது ஒரு தம்பதி ஜோடி பைக்கில் வருவதை போலீசார் கண்டனர். மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காட்டியபோது இந்த ஜோடி வேகமாக தப்பிவிட்டது. இதை அடுத்து சைபர் போலீஸின் உதவியுடன் வாகன பதிவு எண்ணின் உதவியுடன் இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், காவல்துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞனும்,
 

கேரள மாநிலம் திரிச்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கை மீறி வரும் வாகனங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது ஒரு தம்பதி ஜோடி பைக்கில் வருவதை போலீசார் கண்டனர். மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு காவல்துறையினர் சைகை காட்டியபோது இந்த ஜோடி வேகமாக தப்பிவிட்டது. இதை அடுத்து சைபர் போலீஸின் உதவியுடன் வாகன பதிவு எண்ணின் உதவியுடன் இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், காவல்துறையினர் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞனும், அந்த சிறுமியும் தற்போதுதான் திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்கள் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாகவும் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


பெங்களூரில் நர்சிங் படித்துக்கொண்டிருக்கும் சிறுமி ‘டிக் டோக் ’மூலம் அறிமுகம் ஆனதாகவும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகவும், அந்த சிறுமி திருமண வயதை அடையும் வரை காத்திருந்ததாகவும் அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, கோராட்டி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட ஒரு தேவாலயத்தில் மாலைகளை பரிமாறிக் கொண்டனர். இந்த ‘திருமணம் வீடியோவாகவும் எடுக்கப்பட்டது. அந்த வீடியோவை ‘டிக் டோக்கில்’ வெளியிட்டனர். ‘திருமணத்திற்கு பிறகு வீடு திரும்பும் போது இருவரும் போலீசார் கவனிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் விசாரணை செய்து பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரிக்கையுடன் சிறுவன் விடுவிக்கப்பட்டான்.