×

ரெண்டாக்கிய மனைவி -துண்டாக்கிய கணவன் -குடும்ப பிரச்சினையில் நடந்த விபரீதம்

குடும்பத்தை ரெண்டாக்கிய மனைவியை அவரின் கணவர் விரல்களை துண்டாக்கிய கோர சம்பவம் நடந்துள்ளது . மத்திய பிரதேச மாநிலம் பெத்துலில் உள்ள சிச்சோலி கிராமத்தில் வசிக்கும் ராஜு வான்ஷ்கர் என்பவர் தன்னுடைய மனைவியுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த மனைவிக்கும் அவரின் கணவரின் குடும்பத்தினருக்கும் விரோதம் இருந்தது .அதனால் அவர் குடும்பத்தை இரண்டாக பிரித்துவிட்டார் .அதன் பிறகு அவர் தனது கணவர் மற்றும் குழந்ந்தைகளோடு தனியாக வசித்து வந்தார் .அதன் பிறகு அவரின் கணவர்
 


குடும்பத்தை ரெண்டாக்கிய மனைவியை அவரின் கணவர் விரல்களை துண்டாக்கிய கோர சம்பவம் நடந்துள்ளது .


மத்திய பிரதேச மாநிலம் பெத்துலில் உள்ள சிச்சோலி கிராமத்தில் வசிக்கும் ராஜு வான்ஷ்கர் என்பவர் தன்னுடைய மனைவியுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த மனைவிக்கும் அவரின் கணவரின் குடும்பத்தினருக்கும் விரோதம் இருந்தது .அதனால் அவர் குடும்பத்தை இரண்டாக பிரித்துவிட்டார் .அதன் பிறகு அவர் தனது கணவர் மற்றும் குழந்ந்தைகளோடு தனியாக வசித்து வந்தார் .
அதன் பிறகு அவரின் கணவர் ராஜு அடிக்கடி அவரின் மனைவியோடு குடும்பத்தை இரண்டாக்கிவிட்டாயே என்று கூறி சண்டை போட்டு வந்துள்ளார் .இந்த குடும்ப சண்டையின் உச்சமாக கடந்த வியாழக்கிழமை அதிகாலை, ராஜு அவர் மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீது கோடரியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினார். அப்போது அவர் அவரின் ஒரு கையிலுள்ள கட்டைவிரலை நறுக்கி, மற்றொரு கையின் மூன்று விரல்களை துண்டித்துவிட்டார் . .இதனால் வலியில் துடித்த அந்த பெண்ணை அங்குள்ள ஹாஸ்ப்பிடலில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .பிறகு அந்த கணவர் ராஜு மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது .பின்னர் விரைந்து வந்த போலீசார் அந்த ராஜூவை கைது செய்து அவர் மீது வன்முறை வழக்கு பதிவு செய்தார்கள் .பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி அவரை சிறையிலடைத்தார்கள் .