×

பாத்ரூம் கழுவ சொன்ன அண்ணன் -பதட்டமான தம்பி -அடுத்து நடந்த விபரீதம்

பாத்ரூம் கழுவ சொன்ன அண்ணனை அவரின் தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்தார் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் வீட்டு உதவியாளராக பணிபுரியும் லட்சுமி, என்ற பெண் தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த பின்னர் ,மறுமணம் செய்து கொண்டார். அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர் – அவர்கள் 25 வயதான அனில் மற்றும் நான்கு மகள்கள் ஆவர் .பிறகு அவர் அவரது இரண்டாவது கணவருடன். போபாலில் உள்ள சோலா பகுதியில் வசித்தார் .அப்போது அவரின் ரெண்டாவது கணவரின் 32
 

பாத்ரூம் கழுவ சொன்ன அண்ணனை அவரின் தம்பியே கத்தியால் குத்தி கொலை செய்தார்

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் வீட்டு உதவியாளராக பணிபுரியும் லட்சுமி, என்ற பெண் தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த பின்னர் ,மறுமணம் செய்து கொண்டார். அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர் – அவர்கள் 25 வயதான அனில் மற்றும் நான்கு மகள்கள் ஆவர் .பிறகு அவர் அவரது இரண்டாவது கணவருடன். போபாலில் உள்ள சோலா பகுதியில் வசித்தார் .அப்போது அவரின் ரெண்டாவது கணவரின் 32 வயதான மகன் நானக்ராமும் அவர்களுடன் வசித்தார் .

இந்நிலையில் திங்கள் கிழமை இரவு, அனில் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்தனர். இரவு 11 மணியளவில், நானக்ராம் உடல்நிலை சரியில்லாமல் வீடு திரும்பினார்.அப்போது அவர் அணிலை பார்த்து பாத் ரூமை சுத்தம் செய்ய சொன்னார் . இது அனிலுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது . அதை கேட்டு கோபமடைந்த அவர் சமையலறை கத்தியால் நானக்ரமை கொடூரமாக குத்தினார்.இந்த தாக்குதலில் அவர் அங்கேயே இறந்தார்

பிறகு அபார்ட்மென்ட் குடியிருப்பாளர்கள் அனைவரும் தூங்கச் செல்லும் வரை அவரின் உடலுடன் பிளாட்டில் காத்திருந்தார் . பின்னர் அவரின் உடலை கட்டிடத்தின் பின்புறம் அப்புறப்படுத்தினார்.
மறுநாள் காலையில், உள்ளூர்வாசிகள் இறந்தவரின் உடலைக் பார்த்து போலீசுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அவரை கொன்ற அணிலை கைது செய்தனர்
பிறகு காவல்துறையினர் அனில் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.