×

தொடர்ந்து 4வது நாளாக கலைக்கிடமான நிலையில் பிரணாப் உடல்நிலை!

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளார் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனையில் மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதற்குள்ளாக அவருக்கு கொரோனாத் தொற்றும் உறுதியானது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்குள்ளாக அவர் காலமாகிவிட்டதாக சமூக
 

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளார் என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.


குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி டெல்லியில் உள்ள ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனையில் மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதற்குள்ளாக அவருக்கு கொரோனாத் தொற்றும் உறுதியானது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்குள்ளாக அவர் காலமாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் வதந்தி பரப்பினர். ஆனால் இந்த தகவலை மருத்துவமனை மற்றும் பிரணாப் முகர்ஜி குடும்பத்தினர் மறுத்தனர்.
அவரது உடல்நலம் பற்றி தொடர்ந்து அப்டேட்களை மருத்துவமனை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் அறுவைசிகிச்சை முடிந்து நான்கு நாட்கள் ஆகும்

நிலையில் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது அனைத்து முக்கிய உள் உறுப்புகளும் வழக்கமாக செயல்படுகின்றன என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.