“அயல் நாட்டுக்கு அழைத்து செல்வார் ,சிறுமிகளை சீரழிப்பார் ” பத்திரிகை உரிமையாளரின் பலான வேலைகள்..
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் ஒரு தினசரி பத்திரிகை நிறுவனத்தின் முதலாளியான 68 வயதான மியான் .இவர் மீது நிறைய பாலியல் புகார்கள் போலீசுக்கு குவிந்துள்ளன .குறிப்பாக இளம் சிறுமிகளை இவர் பாலியல் பலாத்காரம் செய்ய வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதாக பல புகார்கள் குவிந்த நிலையில் போலீசார் அவரின் வீட்டை சோதனையிட சென்றனர் .
பிறகு போலீசார் செவ்வாய்க்கிழமையன்று மியானுக்கு சொந்தமான திருமண மண்டபத்தை இடித்தனர் .மேலும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீட்டையும் இடித்தனர் .இப்போது மியான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் என்றும் ,எப்போதும் அவரோடு சில சிறுமிகள் இருப்பார்களென்றும் ,அவர்கள் அவரை அப்பு என்று அழைப்பார்களென்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது .