×

கழட்டி விட்ட கணவன் -வலை விரித்த வாலிபர் -கடைசியில் மோசம் போன பெண் .

கணவனை பிரிந்த பெண்ணை, கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள பிப்லானியில் உதய் பக்வான் என்ற 28 வயதான நபர் ஷாஜாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.அவரின் வீட்டருகே ஒரு பெண் தன்னுடைய கணவரை பிரிந்து தனியே தாய் வீட்டில் வசித்து வந்தார் .அப்போது அந்த பெண் தனியே வசிப்பதை பார்த்த அந்த உதய் அந்த பெண்ணுக்கு வலை விரித்தார்
 


கணவனை பிரிந்த பெண்ணை, கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்


மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உள்ள பிப்லானியில் உதய் பக்வான் என்ற 28 வயதான நபர் ஷாஜாப்பூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார்.அவரின் வீட்டருகே ஒரு பெண் தன்னுடைய கணவரை பிரிந்து தனியே தாய் வீட்டில் வசித்து வந்தார் .அப்போது அந்த பெண் தனியே வசிப்பதை பார்த்த அந்த உதய் அந்த பெண்ணுக்கு வலை விரித்தார் .அப்போது அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் அவரை கல்யாணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார் .
அந்த வாக்குறுதியை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரிடம் தன்னையே பலமுறை கொடுத்தார் .கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களின் உறவு தொடர்ந்து வந்தது .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அந்த காதலனை பற்றிய ஒரு ரகசியம் சமீபத்தில் தெரிய வந்தது .அதாவது அந்த உதய்க்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிய விஷயத்தை சிலர் மூலம் கேள்விப்பட்டார் .அதை கேட்டு அதிர்ந்த அந்த பெண் அவரிடம் இது பற்றி கேட்டதற்கு அவர் சரியாக பதில் சொல்லாமல் அவரை விட்டு விலகினார் .ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக அவர் தன்னை பலாத்காரம் செய்ததை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண் அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார் .அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் உதய் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது .