×

“அனைவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இணையுங்கள்” : மோகன் பகவத் அழைப்பு!

கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் கோவை தொழில் வர்த்தகத் துறையை சேர்ந்த 415 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் , “நமது முன்னோர் நமக்கு பல நல்ல விஷயங்களை அளித்துவிட்டு சென்றுள்ளனர். பல வேறுபாடுகள் இருந்தாலும், நம் நாடு அனைத்து துறைகளிலும் முதன்மையானதாக உள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் தேசத்தின் புனர்நிர்மாணம் இலக்கை
 

கோவை கொடிசியா கண்காட்சி அரங்கில் கோவை தொழில் வர்த்தகத் துறையை சேர்ந்த 415 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் , “நமது முன்னோர் நமக்கு பல நல்ல விஷயங்களை அளித்துவிட்டு சென்றுள்ளனர். பல வேறுபாடுகள் இருந்தாலும், நம் நாடு அனைத்து துறைகளிலும் முதன்மையானதாக உள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் தேசத்தின் புனர்நிர்மாணம் இலக்கை அடைய உழைத்து வருகிறது . இது ஒரு மணிநேரம் பண்பு பயிற்சி வாயிலாக தனிமனித நிர்மாணம் மேம்பாட்டுக்கு வழி வகுக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய எந்த நடைமுறைகளும் தேவையில்லை.

அனைவருக்கும் நம் தேச பணியில் இணைய அழைப்பு விடுக்கிறேன். உலக நாடுகளுக்கெல்லாம் வேறு நாடுகளை எப்படிக் கைப்பற்றுவது என்பது தான் ஒரே எண்ணமாக இருந்தது. ஆனால் இந்தியா உலகமே குடும்பமாக கருதியது. உலக நாடுகளுக்கு குருவாக இந்தியா ஒரு காலத்தில் விளங்கி வந்தது. அதை மீண்டும் கொண்டுவரவே ஆர்எஸ்எஸ் பணியாற்றி வருகிறது ” என்றார்.