சொந்த ஊர் திரும்ப முயன்ற தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! – உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர் திரும்ப முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று, அவர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்பினால் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான செய்தி சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, பத்திரிகைகளில் தினம் தினம் வந்துகொண்டே இருந்தது. எதிர்க்கட்சிகள் இந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து போராடி வந்தது. கடைசியில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது கூட யாரும் நடந்து செல்லவில்லை, அரசு ரயில் வசதி செய்து தருகிறது என்றெல்லாம் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
ஊரடங்கை மீறியதாக தொழிலாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதை திரும்பப் பெற வேண்டும்.
தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்ப சிறப்பு ரயலை மாநில அரசுகள் கேட்டால், ரயில்வே துறை 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்து தர வேண்டும். சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று கூறியுள்ளனர்.