“அக்கௌன்ட் நம்பரை கேட்டு ,உங்க பணத்துக்கு வைப்பாங்க வேட்டு” -பிரபல வங்கிகள் பெயரில் போலி கால் சென்டர் நடத்தி பலகோடி மோசடி..
பிரபலமான பல வங்கிகளின் பெயரில் போலியாக கால்சென்டர் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த ஒரு கூட்டத்தை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர் .
டெல்லியில் அனில் சிங் என்பவர் பிரபல வங்கியின் பெயரில் போலியான கால் சென்டர் நடத்தி, அதன் போன் நம்பரை சமூக ஊடகத்தில் வெளியிடுவார் .அப்போது பலர் அந்த போன் நம்பரை பிரபல வங்கியின் போன் நம்பர் என நினைத்து அதற்கு போன் செய்து தங்களின் அக்கௌன்ட் நம்பர் ,ஒடிபி நம்பர் விவரங்களை தெரிவிப்பார்கள் .அதை வைத்து அணில்சிங் கூட்டாளிகள் பொதுமக்களின் அக்கௌன்ட்டிலிருந்து பணத்தை ஆட்டைய போடுவது வழக்கம் .
ராஜத் டாண்டன் என்பவர் ஆன்லைனில் பிரபல வங்கியின் போன் நம்பரை தேடிய போது இந்த டுபாக்கூர் கும்பலின் போன் நம்பர் வந்துள்ளது .உடனே அவர் அந்த நம்பருக்கு போன் செய்து தன்னுடைய பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டார்.