×

பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி!

 

டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் வேலை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பணிக்கு வரவும், பணி முடிந்து திரும்பவும் போக்குவரத்து வசதி, அலுவலகங்களில் சிசிடிவி கண்காணிப்பு உட்பட போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுவனங்கள் செய்து தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இரவு நேரங்களில் பணியாற்றும் ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் மற்றும் வாரத்திற்கு அதிகபட்சமாக 48 மணிநேரம் வரை பணிபுரிய உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.