×

கழுத்தை நெரித்த கடன் தொல்லை : தாய் – மகன் தற்கொலை!!

கடன் பிரச்னை காரணமாக தாய் – மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் சமுத்திரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவருக்கு மீரா என்ற மனைவியும், தேவகுமார் என்ற 23 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கடன் தொல்லையால் அவதிப்பட்டு கொண்டுவந்த சாந்தி ராஜ் – மீரா தம்பதி ஆடி மாதம் குலதெய்வம் வழிபாடு செய்வதற்காக போளூர் அருகே மண்டகொளத்தூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு பட்டணம் காத்த
 

கடன் பிரச்னை காரணமாக தாய் – மகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் சமுத்திரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சாந்தி ராஜ். இவருக்கு மீரா என்ற மனைவியும், தேவகுமார் என்ற 23 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கடன் தொல்லையால் அவதிப்பட்டு கொண்டுவந்த சாந்தி ராஜ் – மீரா தம்பதி ஆடி மாதம் குலதெய்வம் வழிபாடு செய்வதற்காக போளூர் அருகே மண்டகொளத்தூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு பட்டணம் காத்த அம்மன் கோயிலுக்கு சென்று குடும்பத்துடன் வழிபட்ட இவர்கள் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது.

இந்த சூழலில் வீட்டின் அருகில் இருந்த விவசாய கிணறு அருகே கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துவிட்டு கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.உரிமையாளர் வழக்கம்போல நிலத்தை பார்வையிட சென்றபோது கிணற்றுக்குள் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதை கண்டுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் மீரா மற்றும் மகன் தேவ குமாரின் உடலை மீட்டனர். ஆனால் சாந்தி ராஜ் உடல் இன்னும் கிடைக்காததால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.