×

ஆபத்திலிருந்த பெண் கொரானா நோயாளி -உதவுவது போல் வந்த ஆண் நர்ஸ் -அடுத்து நடந்த விபரீதம்

ஒரு பெண் கொரானா நோயாளியை அந்த ஹாஸ்ப்பிட்டல் ஆண் நர்ஸ் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் 43வயதான கோவிட் -19 வைரஸ் பாதித்த பெண் நோயாளி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .அப்போது அந்த ஹாஸ்ப்பிட்டலில் 24 வயதான சந்தோஷ் அஹிர்வார் என்று ஆண் நர்ஸாக பணிபுரிந்தார் .அந்த பெண் அங்கு வந்ததிலிருந்து அந்த ஆண் அடிக்கடி அவருக்கு உதவி செய்வது போல் அவரிடம் வந்து பேச்சு கொடுத்துகொண்டேயிருந்தார் .மேலும் அவர்
 


ஒரு பெண் கொரானா நோயாளியை அந்த ஹாஸ்ப்பிட்டல் ஆண் நர்ஸ் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது


மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள அரசு மருத்துவமனையில் 43வயதான கோவிட் -19 வைரஸ் பாதித்த பெண் நோயாளி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .அப்போது அந்த ஹாஸ்ப்பிட்டலில் 24 வயதான சந்தோஷ் அஹிர்வார் என்று ஆண் நர்ஸாக பணிபுரிந்தார் .அந்த பெண் அங்கு வந்ததிலிருந்து அந்த ஆண் அடிக்கடி அவருக்கு உதவி செய்வது போல் அவரிடம் வந்து பேச்சு கொடுத்துகொண்டேயிருந்தார் .மேலும் அவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதால் டூட்டிக்கு குடித்து விட்டு வருவார் .
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று இரவு அந்த பெண் அவரின் வார்டில் தனியாக இருந்த போது, அந்த ஆண் நர்ஸ் அவரை பாலியல் பலாத்காரம் செய்தார் .அதன் பிறகு அவர் டூட்டிக்கு வரவில்லை .அதன் பிறகு அந்த பெண்னின் உடல்நிலை மோசமானது .அதனால் அவரை அங்குள்ள ஐசியூ வார்டுக்கு மாற்றினார்கள் .அப்போது அந்த பெண் தன்னுடைய உயிர்போகும் நிலையில் அவரை அந்த ஹாஸ்பிடலில் இருந்த சந்தோஷ் அஹிர்வார் என்ற ஆண் நர்ஸ் பலாத்காரம் செய்த விஷயத்தை கூறினார் .அதன் பிறகு அந்த பெண் உயிரை விட்டார் .பின்னர் இது பற்றி அந்த பெண்ணின் உறவினர்கள் போலிசுக்கு தகவல் சொன்னார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்த சந்தோஷ் அஹிர்வார் என்ற நபரை கைது செய்தனர் .