ஶ்ரீஹரிகோட்டாவிலும் பரவிய கொரோனா… ராக்கெட் ஏவுதளம் மூடப்பட்டது!
ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மையத்தில் பல விஞ்ஞானிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் ராக்கெட் ஏவுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஶ்ரீஹரிகோட்டாவுக்குள் தண்ணீர், மின்சாரம், தீயணைப்பு சேவை தவிர்த்து மற்ற அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்து ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.