×

இந்தியாவில் 5.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 5லட்சத்து 77 ஆயிரத்து 756பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 13 ஆயிரத்து 186 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 57லட்சத்து 90 ஆயிரத்து 762 பேர் குணமாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை
 

இதுவரை உலகம் முழுவதும் 1 கோடியே 5லட்சத்து 77 ஆயிரத்து 756பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 5 லட்சத்து 13 ஆயிரத்து 186 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 57லட்சத்து 90 ஆயிரத்து 762 பேர் குணமாகியுள்ளனர்.

இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் அன்லாக் 2.0 ஆரம்பித்து விட்டது. இருப்பினும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்களே ஊரடங்கை நீடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 5,66,840லிருந்து 5,85,493 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,47,979 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,400 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . மகாராஷ்டிராவில் 1,74,761 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; குணமடைந்தோர் எண்ணிக்கை 90,911 ஆக ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,855 ஆக அதிகரித்துள்ளது.