×

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 18,552 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 98 லட்சத்து 98 ஆயிரத்து 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 96 ஆயிரத்து 77 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 53 லட்சத்து 52 ஆயிரத்து 383பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில்
 

இதுவரை உலகம் முழுவதும் 98 லட்சத்து 98 ஆயிரத்து 220 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 96 ஆயிரத்து 77 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 53 லட்சத்து 52 ஆயிரத்து 383பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 4,90,401லிருந்து 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,95,881 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 18,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 1,52,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் குணமடைந்தோர் எண்ணிக்கை 79,815ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,106ஆக அதிகரித்துள்ளது.