×

இந்தியாவில் 15 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி!

இதுவரை உலகம் முழுவதும் 6 லட்சத்து 99 ஆயிரத்து 575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்4 லட்சத்து 90 ஆயிரத்து 935 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 52 லட்சத்து 53 ஆயிரத்து 89பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும்
 

இதுவரை உலகம் முழுவதும் 6 லட்சத்து 99 ஆயிரத்து 575 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்4 லட்சத்து 90 ஆயிரத்து 935 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 52 லட்சத்து 53 ஆயிரத்து 89பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 4,73,105லிருந்து 4,90,401 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,85,637 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,301 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 17,296 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் கொரோனாவால் 407 பேர் உயிரிழந்துள்ளனர்; 13,940 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.