×

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இதுவரை உலகம் முழுவதும் 66 லட்சத்து 97 ஆயிரத்து 763 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 93 ஆயிரத்து 127 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 32 லட்சத்து 44 ஆயிரத்து 423 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

இதுவரை உலகம் முழுவதும் 66 லட்சத்து 97 ஆயிரத்து 763 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 93 ஆயிரத்து 127 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 32 லட்சத்து 44 ஆயிரத்து 423 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 2,16,919 லிருந்து 2,26,770 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,09,462 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,348 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 273 பேர் உயிரிழந்துள்ளனர்.