சளி, காய்ச்சல் மருந்துக்கு அனுமதி வங்கிவிட்டு கொரோனாவுக்கு மருந்து! – பாபா ராம்தேவ் மீது உத்தரகாண்ட் அரசு குற்றச்சாட்டு
சளி, காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து தயாரிக்கிறோம் என்று அனுமதி பெற்றுவிட்டு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பதஞ்சலி நிறுவனம் கூறியுள்ளதாக உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதத் துறை குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த மருந்தை தயாரிப்பதற்கு உத்தரகாண்ட் மாநில அரசு வழங்கிய அனுமதி உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் ஆயுஷ் உத்தரவிட்டது. மருந்து தயாரிப்பு தொடர்பான அனைத்து தகவலையும் மத்திய அரசின் ஆயுஷ் துறைக்கு வழங்கிவிட்டதாக ஆச்சார்யா பாலகிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
சளி, காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்க அனுமதி பெற்றுவிட்டு, கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்று பாபா ராம்தேவ் நிறுவனம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.