அசுர வேகத்தில் பரவும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 1,65,799 ஆக அதிகரிப்பு!
இதுவரை உலகம் முழுவதும் 59 லட்சத்து 4 ஆயிரத்து 284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 61ஆயிரத்து 996 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 25லட்சத்து 79 ஆயிரத்து 505 பேர் குணமாகியுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும்
May 29, 2020, 09:22 IST
இதுவரை உலகம் முழுவதும் 59 லட்சத்து 4 ஆயிரத்து 284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 61ஆயிரத்து 996 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 25லட்சத்து 79 ஆயிரத்து 505 பேர் குணமாகியுள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,58,333 லிருந்து 1,65,799 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71,106 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.