துப்பட்டாவால் தூக்கு போடும் கொரானா நோயாளிகள் -இனி பெண்கள் துப்பட்டா அணிய தடை -பெங்களூரு கொரானா மருத்துவனை அதிரடி உத்தரவு
பெங்களூருவில் 40000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் கொரானாவால் பாதிக்கப்பட்டு ,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண் நோயாளிகள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் .இதனால் மருத்துவமனை நிர்வாகம் இனி பெண் நோயாளிகள் துப்பட்டா அணிந்து வரக்கூடாது என தடை போட்டுள்ளனர் .
மேலும் சில பெண்கள் சேலையால் தூக்கு போட்டும் தற்கொலை செய்து
இரவு நேரங்களில் நோயாளிகள் தூங்குவதற்கு தூக்க மாத்திரை கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது .ஏனெனில் மன உளைச்சலுக்கு ஆளாகும் நோயாளிகள் இரவில்தான் தற்கொலை முடிவெடுப்பார்கள் .அதனால் தூக்க மாத்திரை கொடுக்கவும் ,தொலைக்காட்சியில் யோகா .தியானம் .போன்ற மனதிற்கு உற்சாகமளிக்கும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .மேலும் மனநல மருத்துவரை கொண்டு அனைத்து நோயாளிகளுக்கும் மனநல ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்ட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது .