இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,750ஆக உயர்வு!
இதுவரை உலகம் முழுவதும் 48 லட்சத்து 93 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்3 லட்சத்து 22 ஆயிரத்து 861 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 16 லட்சத்து 86 ஆயிரத்து 487 பேர் குணமாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18 ஆம் தேதிக்கு பிறகும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு
May 20, 2020, 10:50 IST
இதுவரை உலகம் முழுவதும் 48 லட்சத்து 93 ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்3 லட்சத்து 22 ஆயிரத்து 861 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 16 லட்சத்து 86 ஆயிரத்து 487 பேர் குணமாகியுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18 ஆம் தேதிக்கு பிறகும் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 42,298 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.