பெங்களூருவில் மேலும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா? – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டை விட்ட கர்நாடக அரசு
கொரோனாத் தொற்று குறைவாகவே உள்ளது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கர்நாடக அரசு கோட்டைவிட்டதால் தற்போது பெங்களூரு நகரத்தில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. பெருநகரங்களுக்கு இணையாக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் கொரோனாத் தொற்று மிகக் குறைவாகவே இருந்தது. அதே நேரத்தில் தொற்று அதிகரித்து வருகிறது, உடனே ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், ஊரடங்கு தேவையில்லை என்று எடியூரப்பா கூறினார்.
இதுதவிர மேலும் 12,000ம் பேருக்கு கொரோனாத் தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வந்த இந்த 12 ஆயிரம் பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முடிவுகள் வெளியாகவில்லை. கொரோனா உறுதியாகாததால் இவர்களை வீட்டிலேயே தனிமையில் இருக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். அச்சம் காரணமாக பலர் தனியார் மருத்துவமனைகளை நாடியுள்ளனர். அங்கும் படுக்கைகள் நிரம்பிவிட்டதால் புதிதாக யாருக்கும் சிகிச்சை கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.