பணம் தர முடியாது என விரட்டிய வங்கி ஊழியர்… கண்ணீர் விட்டு அழுத மூதாட்டி! – புதுச்சேரியில் அதிர்ச்சி
டெபாசிட் செய்த பணத்தைத் திரும்பத் தர முடியாது என்று கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் விரட்டியதால் மூதாட்டி கண்ணீர் விட்டு அழுத வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த பொறையார் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கிருஷ்ணவேணி, அங்குள்ள பொறையார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கி சிறுக சிறுக சேமித்த பணத்தை எல்லாம் டெபாசிட் செய்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்து, பேப்பர், குப்பைகளில் உள்ள பொருட்களை சேகரித்து அதை விற்று கிடைத்த பணத்தை எல்லாம் வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளார். இப்படி அவர் கணக்கில் ரூ.10,500 உள்ளதாக கூறப்படுகிறது.
அப்போதும் வங்கி ஊழியர்கள் பணம் இல்லை, நாளை வாருங்கள் என்று கூறியுள்ளனர். ஏன் என்று விசாரித்தபோது பதில் சொல்ல முடியாது. எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்துகொள் என்று அலட்சியமாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட அந்த பாட்டி கண்ணீர்விட்டு அழுதார். இந்த நிகழ்வை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.