×

ரூ.862 கோடி மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் டிசம்பரில் தொடக்கம்…

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம் கடந்த 1927ம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர்கள் சர்எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர்ஹெர்பெர்ட் பெக்கர் ஆகியோரின் திட்டப்படி கட்டப்பட்டது. 1950ம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது போதுமானதாக இருக்காது மேலும் நவீன வசதிகளை
 

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றம் கடந்த 1927ம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர்கள் சர்எட்வின் லியூடென்ஸ் மற்றும் சர்ஹெர்பெர்ட் பெக்கர் ஆகியோரின் திட்டப்படி கட்டப்பட்டது. 1950ம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது மற்றும் எதிர்காலத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது போதுமானதாக இருக்காது மேலும் நவீன வசதிகளை ஏற்படுத்தவும் முடியவில்லை இதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய நாடாளுமன்ற வளாக கட்டிடம் கட்ட முடிவு செய்தது. புதிய நாடாளுமன்ற வளாக கட்டிடத்தை டாடா புராஜெக்ட் நிறுவனம் கட்ட உள்ளது.

பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய நாடாளுமன்ற கட்டும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என குரல்கள் எழுந்தது. இதனால் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் திட்டமிட்டப்படி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சூழ்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாகவும், 2022 அக்டோபருக்குள் முடிவடையும் என்றும் மக்களவை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது. ரூ.892 கோடியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.

பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்றம்

புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்றத்தின் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரும் திறன் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தனி அலுவலக அறை மற்றும் காகிதம் அல்லா அலுவலகத்தை உருவாக்கும் நோக்கில் அந்த அலுவலகங்களில் நவீன டிஜிட்டல் கருவிகளும் பொருத்தப்படும். இந்தியாவின் ஜனநாயக பராம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பெரிய அரசியலமைப்பு ஹால், நூலகம், பல குழு அறைகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வு அறை, டைனிங் ஹால்கள் மற்றும் தாராளமான பார்க்கிங் பகுதி போன்ற வசதிகள் புதிதாக உருவாக உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் என தகவல்.