×

கல்யாணம் நிச்சயித்த கான்ஸ்டபிள் -காணாமல் போன மகள் -அடுத்து நடந்த சோகம்.

கல்யாணம் நிச்சயம் செய்த மகள் ஓடிப்போனதால மனமுடைந்த பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டனர் தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் ஒரு 45 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் சங்க ரெட்டி தன்னுடைய 40 வயதான மனைவி மற்றும் இரண்டு மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த தந்தை தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்ய முடிவெடுத்தார் .அதன்படி அவர் இரண்டு பெண்களுக்கும் வெவ்வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார் .பிறகு உறவினர்கள் அனைவருக்கும் பத்திரிகை வைத்தார் .இந்நிலையில் அவரின் பெரிய
 


கல்யாணம் நிச்சயம் செய்த மகள் ஓடிப்போனதால மனமுடைந்த பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டனர்


தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் ஒரு 45 வயதான போலீஸ் கான்ஸ்டபிள் சங்க ரெட்டி தன்னுடைய 40 வயதான மனைவி மற்றும் இரண்டு மகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த தந்தை தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்ய முடிவெடுத்தார் .அதன்படி அவர் இரண்டு பெண்களுக்கும் வெவ்வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்தார் .பிறகு உறவினர்கள் அனைவருக்கும் பத்திரிகை வைத்தார் .இந்நிலையில் அவரின் பெரிய மகள் தந்தை பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்ய ஒப்புக்கொண்டார் .
ஆனால் இளைய மகள் அவர் காதலிக்கும் ஒரு வாலிபரை கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார் .பிறகுஅந்த விஷயத்தை தன்னுடைய தந்தையிடம் கூறினார் .ஆனால் அவரின் தந்தை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை .இந்நிலையில் அந்த பெண் திடீரென அந்த காதலுடன் மாயமானார் .அதனால் அவரை அணைவரும் தேடினார்கள் .அப்போது அவர் தன்னுடைய காதலனுடன் ஓடிப்போனதை கண்டுபிடித்தார்கள் .
அதன் பிறகு இந்த சம்பவத்தால் அந்த தந்தையும் தாயும் மிகவும் மன வேதனையடைந்தார்கள் .அதன் பிறகு அவர்கள் இருவரும் கடந்த வாரம் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர் .பிறகு இந்த தற்கொலை சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .பின்னர் விரைந்து வந்த போலீசார் இருவரின் பிரேதங்களையும் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர் .பிறகு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்