பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 29ம் தேதி மாவட்ட தலைமையகங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பொது செயலாளர் கே.சி. வேணுகோபாலும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் கலந்துரையாடினர். அப்போது ராகுல் காந்தி மாநில தலைவர்களுடன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவுடன் மோதல் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியை வலுவாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.
நமது நட்பு மற்றும் அண்டை நாடுகளுடான உறவு மோசமடைந்துள்ளது இதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு. நேரடி பண பரிமாற்றம் வாயிலாக பொதுமக்களுக்கு உடனடியாக நிதி உதவி அளிக்கும் படி காங்கிரஸ் கோரிக்கை வைத்தது ஆனால் அதனை அரசு ஏற்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். கல்வான் பள்ளதாக்கில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களை நினைவு கொள்ளும்விதமாக நாடு முழுவதும் தியாகிகளுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியை நாளை (26ம் தேதி) நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.