×

டிச.1 முதல் மீண்டும் முழு பொதுமுடக்கமா? மத்திய அரசு விளக்கம்!

நாடு முழுவதும் டிசம்பர் 1ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட பல்வேறு கட்ட தளர்வுகளால் தற்போது இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இருந்தாலும் பண்டிகை காலத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதே போல, உலகம்
 

நாடு முழுவதும் டிசம்பர் 1ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுவிட்டன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட பல்வேறு கட்ட தளர்வுகளால் தற்போது இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. இருந்தாலும் பண்டிகை காலத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதே போல, உலகம் முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா அலை பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா முழுவதும் டிச.1ம் தேதி முதல் மீண்டும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், டிச.1 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், அந்த தகவல் வதந்தி என்றும் தெரிவித்துள்ளது.