×

அடுத்த அதிரடி! குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

 

நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், குருணை அரிசி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதம் ஆகும். இந்தியாவில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதமாக குறைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2022-23- ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி கணிசமாக பாதிக்கும் என கூறப்பட்டது. இதன் காரணமாக நாட்டில் நெல், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்து அரசாணை வெளியிட்டது.  அதன்படி சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டும் 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்தது.

இந்நிலையில், இந்நிலையில், குருணை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவும் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உணவு செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறுகையில், உடைந்த அரிசி ஏற்றுமதியில் முற்றிலும் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைந்த தானியங்கள் கால்நடைத் தீவனம் மற்றும் எத்தனால் கலப்பு திட்டத்துக்கும் போதுமான அளவில் கிடைக்கவில்லை. எனவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.