×

கொரோனா 2ஆம் முறையாக வீழ்த்திய எடியூரப்பா… டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவசர மீட்டிங்!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவிக் கொண்டிருக்கிறது. முன்பை விட அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. முதல் அலையின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் அலையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது. இச்சூழலில் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை மீண்டும் கொரோனா தாக்கியது. கடந்த 18ஆம் தேதி அவருக்குப் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை
 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவிக் கொண்டிருக்கிறது. முன்பை விட அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. முதல் அலையின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் அலையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது.

இச்சூழலில் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவை மீண்டும் கொரோனா தாக்கியது. கடந்த 18ஆம் தேதி அவருக்குப் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்று அவர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பினார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், “சிகிச்சைக்குப் பின் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்று தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார்.