டெல்லியில் பாஜக அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு??
Jul 2, 2025, 15:08 IST
டெல்லியில் சட்ட விரோத ஆலையை சீலிட சென்றபோது அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
டெல்லி அரசின் உணவு வழங்கல், தொழில்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா. இவர் கடந்த சில வாரங்களாக தலைநகர் டெல்லியில் உள்ள சட்டவிரோத ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது; உண்மையில்லை என்றும் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா விளக்கம் அளித்துள்ளார்.