×

தோல் வியாதி வந்த கணவர் -தொட மறுத்த மனைவி -அடுத்து நடந்த விபரீதம் .

தோல் வியாதியால் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு கான்ஸ்டபிள் தனது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தலைமை கான்ஸ்டபிளாக வேலை செய்யும் 40 வயதான முன்ஷி சிங் யாதவ் என்பவர் தனது மனைவி நிஷா தேவி , அவரது மகன்களான கிருஷ்ணா மற்றும் ஷியாம் மற்றும் மகள் சுதா ஆகியோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த கான்ஸ்டபிள் யாதவுக்கு திடீரென உடலில் தோல் வியாதி தோன்றியது .அதனால் அவரை அவரின்
 


தோல் வியாதியால் மன உளைச்சலுக்கு ஆளான ஒரு கான்ஸ்டபிள் தனது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்


உத்திரபிரதேச மாநிலம் காசிப்பூரில் தலைமை கான்ஸ்டபிளாக வேலை செய்யும் 40 வயதான முன்ஷி சிங் யாதவ் என்பவர் தனது மனைவி நிஷா தேவி , அவரது மகன்களான கிருஷ்ணா மற்றும் ஷியாம் மற்றும் மகள் சுதா ஆகியோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த கான்ஸ்டபிள் யாதவுக்கு திடீரென உடலில் தோல் வியாதி தோன்றியது .அதனால் அவரை அவரின் வீட்டிலுள்ளோர் ஒதுக்கி வைத்தனர் .மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை தொடக்கூட அஞ்சினர் .
இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார் .அதனால் கடந்த வாரம் சனிக்கிழமை அதிகாலை அவர் வீட்டிலுள்ள ஒரு கூரையின் அருகே தூங்கிக்கொண்டிருந்தார் .அப்போது திடீரென எழுந்த அவர் அங்கிருந்த ஒரு கத்தியால் அவரின் மனைவியை முதலில் வெட்டி கொன்றார் .பிறகு அவரின் பிள்ளைகளை தாக்கினார் ,,இந்த தாக்குதலில் அவரின் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தார் .பிள்ளைகள் கடுமையான காயத்துடன் தப்பினர் .அதன் பிறகு அந்த யாதவ் அங்குள்ள ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் பற்றி இறந்த யாதவின் சகோதரர் போலீசில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .