ஜூன் 1 முதல் நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும்! – பார் கவுன்சில் வலியுறுத்தல்
வருகிற ஜூன் 1ம் தேதி முதல் இந்தியா முழுக்க வழக்கம்போல் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இதனால் கையளவு மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே பலன் பெறுகின்றனர். 95 சதவிகிதத்துக்கும் அதிகமான வழக்கறிஞர்களுக்கு ஆன்லைன் வழக்கு விசாரணை என்பது வெறும் கனவாகவே உள்ளது. 95 சதவிகித வழக்கறிஞர்களும் பணியின்றி, பொருளாதார உதவியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இந்தியாவில் நீதிமன்றங்கள் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் வழக்கமான முறையில் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.