×

“அதுக்கு வரலேன்னா ஆபிசுக்கு வரமுடியாது” -மிரட்டிய அதிகாரியால் அலறிய பெண் ஊழியர் …

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மாநில ஆயுஷ் இயக்குநரகத்தின் பெண் ஊழியர், அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அந்த நிறுவனத்தின் இயக்குநர் தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டினார். மாநில ஆயுஷ் இயக்குநரகத்தின் 25 வயதான பெண்மணி, அந்த ஆயுஷ் இயக்குநரகத்தில் அவுட்சோர்சிங் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிகிறார்.அந்த ஆபிசில் மூத்த OAS அதிகாரியான இயக்குனர் பிபு பிரசாத் சாரங்கி என்பவர் அவருடன் பாலியல் உறவு கொள்ளுமாறு பலமுறை அழுத்தம் கொடுத்தார் என்று அவர் குற்றம் சாட்டினார், ஆனால்
 

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மாநில ஆயுஷ் இயக்குநரகத்தின் பெண் ஊழியர், அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள அந்த நிறுவனத்தின் இயக்குநர் தன்னை மிரட்டியதாக குற்றம் சாட்டினார்.


மாநில ஆயுஷ் இயக்குநரகத்தின் 25 வயதான பெண்மணி, அந்த ஆயுஷ் இயக்குநரகத்தில் அவுட்சோர்சிங் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிகிறார்.அந்த ஆபிசில் மூத்த OAS அதிகாரியான இயக்குனர் பிபு பிரசாத் சாரங்கி என்பவர் அவருடன் பாலியல் உறவு கொள்ளுமாறு பலமுறை அழுத்தம் கொடுத்தார் என்று அவர் குற்றம் சாட்டினார், ஆனால் அதை அவர் பல முறை மறுத்துவிட்டார்.
அவர் மறுத்ததால், சாரங்கி ஜூன் 28 முதல் அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சில ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார் . மேலும் அவர் வாட்ஸ்அப்பில் அவரின் நம்பரை தடுத்தபோது, அந்த பெண்ணிடம் அவர் துஷ்பிரயோகம் செய்து மிரட்டியுள்ளார்


கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் அந்த பெண்ணுக்கு மோசமான வீடியோக்களை மீண்டும் அனுப்பிய சாரங்கியின் இந்த செயலை எதிர்த்தபோது சாரங்கி தன்னை பதவி நீக்கம் செய்வதாகவும் அச்சுறுத்தியுள்ளார் என்று அந்த பெண் போலீசில் அவர் மீது புகாரளித்துள்ளார்.புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.