×

முதன்முறையாக ரயிலில் ஏடிஎம் வசதி!

 

விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, ரயிலில் ஏடிஎம் மெசின் வைக்கப்பட்டுள்ளது.


நாட்டிலேயே முதன்முறையாக இந்திய ரயில்வே ஒரு ரயிலில் தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரத்தை (ATM) நிறுவியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள மன்மாட்-சிஎஸ்டி பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 10 ஆம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.