கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ. 15,000 உதவித்தொகை
ஆந்திராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில், 24,171 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,491 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 9,372 ஆக உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் இறந்தவரின் சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ. 15,000 உதவித்தொகை வழங்க ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தகுந்த
May 16, 2021, 20:36 IST
ஆந்திராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில், 24,171 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,491 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 101 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 9,372 ஆக உள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் இறந்தவரின் சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ. 15,000 உதவித்தொகை வழங்க ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டங்களின் கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.