பித்தளையில் பர்தா… மாணவர்கள் மீது புகார் கூறிய அலிகார் பல்கலைக் கழக மாணவி!
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக் கழகத்தில் சக மாணவியை பித்தளையில் பர்தா அணிந்து வரும்படி மாணவர் ஒருவர் வற்புறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எஸ்.எஸ்பி கூறுகையில், “இளநிலை கட்டிடக்கலையியல் படிக்கும் மாணவி சில கல்லூரிகளில் பெண்கள் புர்கா அணிந்து வர கட்டாயப்படுத்துவது தொடர்பாக தன்னுடைய கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார். அதற்கு அவருடன் படிக்கும் சில மாணவர்கள் சமூக ஊடகம் மூலமாகத் தவறாக பேசியுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம் பிரச்னை காலத்திலிருந்து இந்த மாணவியை குறிவைத்து அவர்கள் பேசி வந்துள்ளனர். அவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.