×

ஆபத்தான நிலையிலிருந்த பெண் கொரானா நோயாளி -ஆசைப்பட்ட ஆம்புலன்ஸ் உதவியாளர் -ஆம்புலன்சில் நடந்த அவலம் .

ஆபத்தான நிலையிலிருந்த ஒரு பெண் கொரானா நோயாளிக்கு ஆம்புலன்சில் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு ஆம்புலன்ஸ் உதவியாளர் கைது செய்யப்பட்டார் . கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 33 வயதான பெண்ணொருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது .அதனால் அவரை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி அருகிலுள்ள ஸ்கேன் சென்டருக்கு கூட்டி சென்றார்கள் .அப்போது அந்த ஆம்புலன்சில்
 


ஆபத்தான நிலையிலிருந்த ஒரு பெண் கொரானா நோயாளிக்கு ஆம்புலன்சில் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு ஆம்புலன்ஸ் உதவியாளர் கைது செய்யப்பட்டார் .

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் பெரிந்தல்மண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 33 வயதான பெண்ணொருவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் தேதியன்று அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்தது .அதனால் அவரை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி அருகிலுள்ள ஸ்கேன் சென்டருக்கு கூட்டி சென்றார்கள் .
அப்போது அந்த ஆம்புலன்சில் இருந்த பிரசாந்த் என்ற உதவியாளர் அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தார் .அப்போது அந்த பெண் உடல்நிலை மோசமாக இருந்தததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை .பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் .அதன் பிறகு சென்ற மே 13 ம் தேதி அந்த பெண், அந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் தன்னை பாலியல் தொல்லை கொடுத்ததை அந்த ஹாஸ்ப்பிட்டல் டாக்டர் ஒருவரிடம் கூறினார் .
அந்த டாக்டர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் .பின்னர் அவர் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் மீது புகார் அளித்தார் .போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த பிரசாந்தை கைது செய்தனர் .